திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது + "||" + Electricity officer arrested for trying to rape girl near Tiruvallur
திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது
திருவள்ளூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மின்வாரிய அதிகாரி கைது போக்சோ சட்டம் பாய்ந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 54). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உயர் மின் அழுத்த மின்சார கம்பி அமைக்கும் பணியில் சிறப்பு பிரிவு உதவி செயற்பொறியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் தன்னுடைய வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன சிறுமி இது குறித்து தன்னுடைய பெற்றோர்களிடம் கூறி உள்ளார். இது குறித்து அவரது பெற்றோர்கள் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று சுரேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி பி.ஆர்.டி.சி. ஒப்பந்த ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர்.