திருப்பத்தூரில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்


திருப்பத்தூரில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2020 11:00 AM GMT (Updated: 29 Oct 2020 10:47 AM GMT)

திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர், 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பி.பாண்டியன் தலைமை தாங்கினார். 

வி.சி.பாபு வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை எம்.பி. சுரேஷ்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். ஆசிரியர்கள் 50 ஆண்டுகளாக பெற்றுவந்த உயர் கல்வி தகுதிக்கான ஊக்க உயர்வுகளை மறுக்கும் அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் பணி நியமனத்தில் வயது வரம்பை 40 ஆக குறைத்து வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அறிவழகன், திருநாவுக்கரசு, கலைவாணன், எஸ்.சிவகுமார் உள்ளிட்டோர் பலர் பேசினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பரசுராமன் நன்றி கூறினார்.

Next Story