போனஸ் குறைத்து அறிவித்ததை கண்டித்து தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Transport workers protest in Tanjore against the announcement of bonus cuts
போனஸ் குறைத்து அறிவித்ததை கண்டித்து தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
போனஸ் குறைத்து அறிவித்த தமிழக அரசை கண்டித்து தஞ்சையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ பொதுச்செயலாளர் மணிமாறன், அரசு விரைவு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் வெங்கடேசன், செங்குட்டுவன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், பொதுச்செயலாளர் கஸ்தூரி, ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் அப்பாதுரை, வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கோஷங்கள் எழுப்பினர்
ஆர்ப்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராடி பல ஆண்டுகளாக 20 சதவீத போனஸ் பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 2019-20 ஆம் நிதியாண்டிற்கான போனஸ் தொகை 25 சதவீதமாக வழங்கிட கோரிக்கை வைத்து போராடி வருகிறோம். இந்த நிலையில் தமிழக அரசு கொரோனாவை காரணம் காட்டி போனஸ் 10 சதவீதம் ஆக குறைத்து இருப்பது வேதனைக்குரியது. இது தொழிலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது இதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.