அரியலூரில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று


அரியலூரில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 18 Nov 2020 1:30 PM GMT (Updated: 18 Nov 2020 1:14 PM GMT)

அரியலூரில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பெரம்பலூரில் 2-வது நாளாக நேற்றும் யாரும் பாதிக்கப்படவில்லை.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று திருமானூர், செந்துறை, தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் தலா ஒருவருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும் என மொத்தம் 7 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,512 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 165 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 4,299 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 372 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் போல், நேற்றும் யாரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படாததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,228 உள்ளது. தமிழகத்திலேயே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்த எண்ணிக்கையை கொண்ட மாவட்டமாக பெரம்பலூர் திகழ்கிறது.

மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,175 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 32 பேர் மட்டுமே வெளிமாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு யாரும் சிகிச்சையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 513 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story