நாகை பகுதியில் பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


நாகை பகுதியில் பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 10 Dec 2020 2:06 AM GMT (Updated: 10 Dec 2020 2:06 AM GMT)

நாகை பகுதியில் பைவரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் கார்த்திகை மாத பைரவாஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாமிக்கு மஞ்சள், திரவிய பொடி, மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பைரவருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் தரிசனம்

இதேபோல் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள காலபைரவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்திநாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகீரிஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் அஷ்ட பைரவர், வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் உள்ள பைரவர் கோவில், உள்ளிட்ட கோவில்களில் பைரவருக்கு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story