சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி 58 பேருக்கு தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக உள்ளது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 66 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 6 பேர், கொளத்தூரில் 4 பேர், ஆத்தூர், கெங்கவள்ளி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
முதியவர் பலி
நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 3 பேர், ஈரோட்டில் இருந்து சேலம் வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 831 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 66 பேர் குணமடைந்துவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனிடையே சேலத்தை சேர்ந்த 80 வயதுடைய முதியவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பலியானார்.
Related Tags :
Next Story