படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அரங்கலட்சுமி (வயது 48). இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 29). இவருக்கு 5 வயதில் பாலமுருகன் என்ற மகன் உள்ளான். தாயாருடன் வசித்து வந்த பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் விசாரணை செய்ததில் குடும்பத்தகராறு காரணமாக பிரியதர்ஷினியும் அவரது கணவர் மணிகண்டனும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதும் அதன் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
பிரியதர்ஷினியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story