பெரம்பலூாில் கொரோனா பாதிப்பு இல்லை


பெரம்பலூாில் கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 18 Jan 2021 10:55 AM GMT (Updated: 18 Jan 2021 10:55 AM GMT)

பெரம்பலூாில் நேற்று கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.

பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியிலும், வெளி மாவட்டங்களில் இருந்து வசிப்பவர்கள் பகுதியிலும் தலா ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,662 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஏற்கனவே 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் மொத்தம் 4,583 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்கு தற்போது 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 168 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பதும், தற்போது கொரோனாவுக்கு ஒருவர் மட்டுமே சிகிச்சையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 129 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story