கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் பாராட்டு + "||" + The police superintendent praised the public for getting up halfway through the meeting and petitioning disabled women
கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்கள் பாராட்டு
கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனு வாங்கிய போலீஸ் சூப்பிரண்டை பொதுமக்கள் பாராட்டினர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தினமும் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்த மனுக்களை பெற்று அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்றும் ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
அவ்வாறு வந்தவர்களில் 2 மாற்றுத்திறனாளி பெண்களும் இருந்தனர். அந்த பெண்களால் நடக்க முடியாத நிலையில் கீழ் தளத்தில் அமர்ந்திருந்தனர்.
மனுக்கள் வாங்கினார்
அந்த சமயத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முதல் தளத்தில் போலீசாருடனான ஆலோசனை கூட்டத்தில் இருந்தார். இந்த நிலையில் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்கள் மனு அளிப்பதற்காக காத்திருப்பதை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உடனடியாக கூட்டத்தில் இருந்து பாதியில் எழுந்து தரைதளத்துக்கு வந்தார்.
அங்கு காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்களிடம் மனுவை வாங்கி குறைகளை கேட்டார். பின்னர் அவர்கள் அளித்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அவருடைய செயலை அங்கிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினா்.
கூடுவாஞ்சேரி முதல் கொட்டமேடு வரையிலான 4 வழி சாலை பணி அரைகுறையாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆகவே கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மாமல்லபுரம் நவீன பஸ் நிலைய பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.52 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் 2-வது முறையாக விலை ஏற்றப்பட்டதற்கு அரசியல் கட்சி தலை வர்கள், பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.