வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தர்ணா போராட்டம்


வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2021 2:05 AM GMT (Updated: 24 Jan 2021 2:05 AM GMT)

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி திருவாரூரில் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

திருவாரூர்,

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி திருவாரூரில் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பு சி.ஜ.டி.யூ., ஏ.ஜ.டி.யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு தொழிற் சங்க தலைவர்கள் குணசேகரன் (ஏ.ஐ.டி.யூ.சி), குருநாதன் (தொ.மு.ச.), மாலதி (சி.ஜ.டி.யூ.) ஆகியோர் தலைமை தாங்கினர். தொழிற் சங்க நிர்வாகிகள் முருகையன், மகாதேவன், சந்திரசேகர ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவசாயிகளுக்கு எதிராக

செயல்படும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story