தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2021 5:03 AM GMT (Updated: 24 Jan 2021 5:03 AM GMT)

குமரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மீனவர்களை படுகொலை செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுரே‌‌ஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெயகோகுலன், மாநில அமைப்பு துணை தலைவர் தமிழ்செல்வன், செயலாளர் மணிமாறன், பேச்சாளர் சகிம்சன், மாவட்ட அமைப்பாளர்கள் அப்துல்லா மற்றும் ரூபின் ஆன்டனி உள்பட பலர் கலந்துகொண்டனர். இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோ‌‌ஷங்களையும் எழுப்பினர்.

Next Story