தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 Jan 2021 1:47 AM GMT (Updated: 26 Jan 2021 1:47 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம், தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் சண்முகா நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் திலகமணி (வயது 32). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பற்றி தகவல் அறிந்த ஒட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய திலகமணியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகமணி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story