அரியலூரில் போலீசாா் கொடி அணிவகுப்பு


அரியலூரில் போலீசாா் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 30 Jan 2021 12:06 AM IST (Updated: 30 Jan 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் போலீசாாின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

அரியலூர்,

அரியலூரில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அணிவகுப்பில் கூடுதல் சூப்பிரண்டுகள் சுந்தரமூர்த்தி, திருமேனி, அரியலூர் உட்கோட்ட துணை சூப்பிரண்டு மதன் மற்றும் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு பாரதிதாசன், இன்ஸ்பெக்டர்கள் அரியலூர் செந்தில்மாறன், கீழப்பழுவூர் வெங்கடேஸ்வரன், கயர்லாபாத் ராஜா, திருமானூர் இமானுவேல் ராயப்பன், அரியலூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மதிவாணன் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

அரியலூர் காமராஜர் திடலில் தொடங்கிய கொடி அணிவகுப்பு சத்திரம், எம்.ஜி.ஆர். சிலை வழியாக அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் வஜ்ரா மற்றும் வருண் ஆகிய வாகனங்களும் பங்கேற்றன.
1 More update

Next Story