அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்


அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2021 5:40 AM GMT (Updated: 31 Jan 2021 5:40 AM GMT)

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்,

உண்ணாவிரதம்
14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள்  அரியலூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்து பேசாவிட்டால் வேலை நிறுத்தம் குறித்து அறிவிப்பு செய்யப்படும் என்று தெரிவித்தனர். போராட்டத்தில் தொ.மு.ச. செயலாளர் சட்டநாதன், கிளை தலைவர் கனகராஜ் மற்றும் சி.ஐ.டி.யு., அம்பேத்கர் தொழிற்சங்கம், எஸ்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு கிளை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கொளஞ்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், பேச்சுவார்த்தையை நடத்தி ஊதியம் வழங்க தவறினால் அடுத்த கட்டமாக மண்டல அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போராட்டத்தில் எல்.பி.எப், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட அனைத்து சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story