வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு: 5 வீடுகள் இடித்து அகற்றம்


வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு: 5 வீடுகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 3 Feb 2021 2:51 AM GMT (Updated: 3 Feb 2021 2:54 AM GMT)

பென்னாகரம் அருகே ஜங்கமையனூர் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 72 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

பென்னாகரம்,

பென்னாகரம் அருகே ஜங்கமையனூர் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 72 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் தகுதியற்ற 5 பேருக்கு வீட்டுமனை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பென்னாகரம் தாசில்தார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி, பழனி, கருவூராள், சரசு, ஞானமணி ஆகிய 5 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதில் மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளும்படி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் 5 பேரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளாததால் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அனுமதியின்றி கட்டப்பட்ட 5 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. இந்த பணியை தாசில்தார் சேதுலிங்கம், போலீஸ் துணை சூப்பிரண்டு சவுந்தரராஜன் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில பரபரப்பு ஏற்பட்டது.

Next Story