நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் டாக்டர் உள்பட 6 பேருக்கு கொரோனா


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் டாக்டர் உள்பட 6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Feb 2021 9:45 PM GMT (Updated: 4 Feb 2021 9:45 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்த டாக்டர் ஆவார். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 15 ஆயிரத்து 322 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 213 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 67 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்தவர்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 248 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இதில் நேற்று 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது 31 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 159 பேர் உயிரிழந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 284 ஆக உள்ளது. இதில் 16 ஆயிரத்து 125 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 18 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 141 பேர் இறந்து உள்ளனர்.

Next Story