தோட்டத்தில் ஆடு மேய்ந்ததை தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கியவர் கைது


தோட்டத்தில் ஆடு மேய்ந்ததை தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2021 2:22 AM GMT (Updated: 5 Feb 2021 2:24 AM GMT)

தோட்டத்தில் ஆடு மேய்ந்ததை தட்டிக்கேட்ட பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டாா்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கருடகம்பத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியனின் மனைவி கண்ணகி (வயது 40). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஜோதிராமலிங்கத்திற்கும்(59) இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஜோதிராமலிங்கத்திற்கு சொந்தமான ஆடு, கண்ணகியின் தோட்டத்தில் மேய்ந்தது. இதை தட்டிக்கேட்ட கண்ணகியை தகாத வார்த்தையால் திட்டி, ஜோதிராமலிங்கம் தாக்கினார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கண்ணகி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிந்து ஜோதிராமலிங்கத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story