அரியலூரில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

x
தினத்தந்தி 7 Feb 2021 6:38 AM IST (Updated: 7 Feb 2021 6:51 AM IST)
அரியலூரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் கருவிடைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன்(வயது 72). விவசாயியான இவர் நேற்று காலை அவரது வயலுக்கு நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





