சென்னை ஐகோர்ட்டில் பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு சாவு


சென்னை ஐகோர்ட்டில் பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு சாவு
x
தினத்தந்தி 8 Feb 2021 4:11 AM GMT (Updated: 8 Feb 2021 4:11 AM GMT)

சென்னை ஐகோர்ட்டில் பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு சாவு தலையில் காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்தவர்.

திரு.வி.க. நகர், 

சென்னை வியாசர்பாடி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சரளா (வயது 43). இவர், புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 25-ந் தேதி ஒரு வழக்கு சம்பந்தமாக பணியின்போது சென்னை ஐகோர்ட்டுக்கு சென்று இருந்தார். அங்கு போலீஸ் ஏட்டு சரளா திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்த அவரை அருகிலிருந்த சக போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஏட்டு சரளா பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ் நிலையத்தில் கலகலப்புடனும், உற்சாகத்துடனும் பணி செய்து வந்த ஏட்டு சரளா உயிரிழந்த சம்பவம் சக போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயர் அதிகாரிகளும், போலீசாரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


Next Story