கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சிகிச்சை


கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 8 Feb 2021 11:22 AM IST (Updated: 8 Feb 2021 11:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மொத்தம் 4,707 பேரில், 49 பேர் உயிரிழந்துள்ளனர். 4,640 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 18 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 170 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
1 More update

Next Story