வாகனம் மோதி 2 பேர் சாவு

x
தினத்தந்தி 13 Feb 2021 2:30 AM IST (Updated: 13 Feb 2021 2:30 AM IST)
வாகனம் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்
மேலூர்
மேலூர் அருகே உள்ள சாலக்கிப்பட்டியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை (வயது22) மற்றும் தினேஷ் (23). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு 9.15 மணியளவில் திருச்சி நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிளில் தும்பைப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தாமரைப்பட்டி விலக்கு என்னுமிடத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த மேலூர் போலீசார், 2 வாலிபர்களிடன் உடல்களை கைப்பற்றி மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





