விவசாயி விஷம் குடித்து தற்கொலை


விவசாயி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 13 Feb 2021 7:57 PM GMT (Updated: 13 Feb 2021 7:57 PM GMT)

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேப்பந்தட்டை:
வேப்பந்தட்டை அருகே கை.களத்தூர் பாதாங்கியை சேர்ந்தவர் ராமுலு (வயது 60). விவசாயி. குடிப்பழக்கம் உள்ள இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்தை நிறுத்த முயற்சித்து முடியாத காரணத்தால் மனமுடைந்த ராமுலு நேற்று முன்தினம் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story