மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்


மணல் கடத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல்
x
தினத்தந்தி 15 Feb 2021 12:31 AM IST (Updated: 15 Feb 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் விக்கிரமங்கலம் அருகே உள்ள காசாங்கோட்டை பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காசாங்கோட்டையில் இருந்து ஸ்ரீபுரந்தான் நோக்கி வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனையில் ஈடுபட போலீசார் முயன்றனர். அப்போது சரக்கு ஆட்டோ டிரைவர், ஆட்டோவை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சரக்கு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தபோது, அதில் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து அரியலூர் பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
1 More update

Next Story