திண்டிவனம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

திண்டிவனம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் நகை திருடு போனது.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் ஆசைத்தம்பி (வயது 45). கட்டிட தொரிலாளி. இவர் கடந்த 14-ந்தேதி உத்திரமேரூர் அருகில் உள்ள வெள்ள புத்தூரில் உள்ள த னது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். அவரது மகள் ரோஷினி என்பவர் மட்டும் வீட்டில் இருந்தார்.
திண்டிவனம் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும், ரோஷினி நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, 9 கிராம் தங்க நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியன திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story