மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று


மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 16 Feb 2021 6:49 PM GMT (Updated: 16 Feb 2021 6:49 PM GMT)

அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று திருமானூர் ஒன்றியத்தில் ஒருவர், தா.பழூர் ஒன்றியத்தில் ஒருவர் மற்றும் மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்களில் ஒருவர் என மொத்தம் 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,716 ஆக உயர்ந்துள்ளது. இதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 4,646 பேர் வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மொத்தம் 315 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story