கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி


கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி
x
தினத்தந்தி 17 Feb 2021 8:05 PM GMT (Updated: 17 Feb 2021 8:05 PM GMT)

கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கூமாபட்டி நெடுங்குளம் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்தவர் அய்யனார் (வயது70). இவர் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் உள்ள பம்பு செட்டில் குளிக்க சென்றார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் கூமாபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அய்யனார் உடலை கைப்பற்றி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story