பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2021 7:12 PM GMT (Updated: 22 Feb 2021 7:12 PM GMT)

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுமக்களை வெகுவாக பாதிக்கும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். தமிழக அரசு வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர அனைத்து அணி பொறுப்பாளர்கள் மற்றும் ஆட்டோ, கார் டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story