வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 22 Feb 2021 7:58 PM GMT (Updated: 22 Feb 2021 7:58 PM GMT)

போக்சோவில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் இலையூர் கிராமம் காமராஜர் நகரை சேர்ந்த பழனிவேலின் மகன் மணிகண்டன்(வயது 23). இவர் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததோடு, அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு அவரை கைது செய்தனர். இந்நிலையில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மணிகண்டனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டு மணிகண்டனை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Next Story