கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 26 Feb 2021 2:45 AM IST (Updated: 26 Feb 2021 2:45 AM IST)
கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர், காலமுறை ஊதியம் கேட்டு உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கணபதி கோரிக்கைகளை விளக்கி பேசினார். முன்னதாக வட்ட தலைவர் மதியழகன் வரவேற்றார். இறுதியில் மாநில செயற்குழு உறுப்பினர் சுகுணா நன்றி கூறினார். இதில் அனைத்து கிராம உதவியாளர்களும் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





