ஓலையூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்


ஓலையூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 25 Feb 2021 9:17 PM GMT (Updated: 25 Feb 2021 9:17 PM GMT)

ஓலையூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ஓலையூர் துணை மின் நிலையத்தில் தீனதயாள் திட்டத்தின் கீழ் இன்று(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான ஓலையூர், பெரியாத்துக்குறிச்சி, விழுதுடையான் உள்ளிட்ட கிராமங்களில் இன்று மதியம் 12 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. தவிர்க்க முடியாத காரணங்களால் மின் தடைைய விலக்கி கொள்ளவும் வாய்ப்புள்ளது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் கோதண்டராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story