மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2021 7:15 PM GMT (Updated: 26 Feb 2021 7:15 PM GMT)

மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் கடம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கடம்பூர் மேலத்தெருைவ சேர்ந்த தங்கராசுவின்(வயது 59) வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தங்கராசுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story