மாடு மிரண்டதில் வண்டியில் இருந்து கீழே விழுந்த விவசாயி சாவு
மாடு மிரண்டதில் வண்டியில் இருந்து கீழே விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய பட்டக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர்(வயது 40). விவசாயியான இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நெல் அரைப்பதற்காக நெல் மூட்டைகளை தனது மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு சின்ன பட்டக்காடு கிராமத்தில் உள்ள ஒரு அரிசி அரவை ஆலைக்கு சென்றார். வழியில் மாடு மிரண்டதில் தவறி கீழே விழுந்த சுதாகர் மீது மாட்டு வண்டி ஏறி படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story