கிராம ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்


கிராம ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2021 1:02 AM IST (Updated: 27 Feb 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

கிராம ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிவேலன் தலைமை தாங்கினார். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் ராஜேந்திரன், முருகேசன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story