மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய மீன்கள்

கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கின. இருந்த போதிலும் கூடுதல் விலை கிடைக்காததால் கவலை அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள் சிக்கின. இருந்த போதிலும் கூடுதல் விலை கிடைக்காததால் கவலை அடைந்துள்ளனர்.
அதிக அளவில் சிக்கிய மீன்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோடியக்கரையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதனை தொடர்ந்து நேற்று காலை மீனவர்கள் கரை திரும்பினர்.
மீனவர்கள் வலையில் இறால், நண்டு, சிங்கி இறால், திருக்கை மீன், பண்ணா, போத்தல், நீலக்கலர் நண்டு, வாவல், காலா, சங்கரா, நெத்திலி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிக அளவில் சிக்கி இருந்தன.
கேரளாவுக்கு ஏற்றுமதி
மீன் வரத்து அதிகரித்துள்ளதால் கோடியக்கரை கடற்கரை பகுதியில் உள்ள மீன் ஏலம் விடும் பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் அலை மோதியது.
கோடியக்கரையில் இருந்து தினமும் கேரளாவுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் தற்போது கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்பதால் கேரளாவுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் உள்ளுர் சந்தையில் மட்டுமே மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.
கூடுதல் விலை கிடக்கவில்லை
அதிக அளவில் மீன்கள் சிக்கியும் கூடுதல் விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்தனர். கேரளாவில் தவக்காலம் முடிந்த பிறகுதான் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று மீனவர்கள் தெரிவி்த்தனர்.
Related Tags :
Next Story






