ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் வரத்து அதிகரிப்பு காரணமாக கொப்பரை தேங்காய் விலை குறைந்தது


ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் வரத்து அதிகரிப்பு காரணமாக கொப்பரை தேங்காய் விலை குறைந்தது
x
தினத்தந்தி 2 March 2021 10:23 PM GMT (Updated: 2 March 2021 10:25 PM GMT)

ஆனைமலையில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்து காணப்பட்டது.

பொள்ளாச்சி,

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கி, ஏலத்தை நடத்தி வைத்தார். 

ஏலத்திற்கு ஆனைமலை, நா.மூ.சுங்கம், அம்பராம்பாளையம், சேத்துமடை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 668 மூட்டை கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

காங்கயம், வெள்ளக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் குறைந்த விலைக்கு ஏலம் போனது. 

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

கொப்பரை தேங்காய்கள் தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. அதன்படி 380 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் ரூ.110.10 முதல் ரூ.137.70-க்கும், 288 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் ரூ.82.50 முதல் ரூ.102.50-க்கும் ஏலம் போனது. 

கடந்த வாரம் 484 மூட்டை கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாரம் கூடுதலாக 184 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட ரூ.3 விலை குறைந்து உள்ளது. 

ஏற்கனவே வெள்ளை ஈ தாக்குதல் காரணமாக தேங்காய் உற்பத்தி குறைந்து உள்ளது. இந்த நிலையில் தற்போது சீசன் தொடங்கி விட்டதால் கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story