வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 March 2021 4:45 PM GMT (Updated: 3 March 2021 4:45 PM GMT)

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

மேலூர்,
மேலூரில் உள்ள முனியாண்டிகோவில் தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம் (வயது58). கூலித்தொழிலாளியான இவர் வேலை முடிந்து மதுரை நான்கு வழி சாலையில் முனிக்கோவில் என்னுமிடத்தில் நடந்து வந்தார். அப்போது அவரை இருவர் வழி மறித்து மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றுவிட்டதாக மேலூர் போலீசில் புகார் செய்துள்ளார்.வழக்கு பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கீழவளவை சேர்ந்த பிரகாஷ் (26) மற்றும் அதே ஊரை சேர்ந்த தேவன் ஆகிய 2 பேரை கைது செய்தார்.

Next Story