திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 5 March 2021 6:56 PM GMT (Updated: 5 March 2021 6:56 PM GMT)

அரியலூரில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர்:
அரியலூர் தெற்கு தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டன. கலசங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வலம் வந்த பின்னர், கோபுரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story