100 சதவீதம் வாக்களிப்பது குறித்து அரியலூரில் விழிப்புணர்வு கோலம்


100 சதவீதம் வாக்களிப்பது குறித்து அரியலூரில் விழிப்புணர்வு கோலம்
x
தினத்தந்தி 5 March 2021 8:51 PM GMT (Updated: 5 March 2021 8:51 PM GMT)

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து அரியலூரில் விழிப்புணர்வு கோலம் போடப்பட்டது.

அரியலூர்:
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரங்கோலி கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மகளிர் சுய உதவிக்குழுவினரால் போடப்பட்ட ரங்கோலி கோலங்களை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரத்னா பார்வையிட்டார். பின்னர் அவர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை மூலம் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 100 சதவீதம் வாக்குப்பதிவு ஏற்படுத்தும் பொருட்டு வாக்காளர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனமானது வருகிற 16-ந்தேதி வரை மாவட்ட பகுதிகளில் வலம் வருகிறது.

Next Story