காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது


காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 March 2021 7:50 PM GMT (Updated: 6 March 2021 7:50 PM GMT)

காதலித்த பெண்ணை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்:

பாலியல் பலாத்காரம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த குருவாலப்பர் கோவில் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் வினோத்குமார்(வயது 26). இவர், 25 வயது பெண்ணை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனால் அந்த பெண் கர்ப்பமானதாகவும், இதையறிந்த வினோத்குமாரின் உறவினர்கள் மாத்திரை வாங்கி கொடுத்து கருவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் வினோத்குமார், அந்த பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கைது
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிநாடு சென்ற வினோத்குமார், அந்த பெண்ணுடன் போனில் பேசி வந்துள்ளார். சமீபத்தில் ஊருக்கு திரும்பிய அவர், அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வினோத்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டபோது, அதற்கு மறுத்து வினோத்குமார், அவருடைய தாய் வெண்ணிலா(43), சித்தப்பா செல்வகுமார்(42) ஆகியோர் சேர்ந்து தன்னை திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் வினோத்குமார், வெண்ணிலா, செல்வகுமார் ஆகிய 3 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்குப்பதிந்து வினோத்குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Next Story