சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது

சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதற்கிடையே சிறுமி, அந்த சிறுவனுடன் பேசியதை அவரது உறவினர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானதை அறிந்த அவருடைய உறவினர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்குப்பதிவு செய்து, சிறுவனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






