பெண் விஷம் குடித்து தற்கொலை


பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 March 2021 1:32 AM IST (Updated: 8 March 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

ஆவரைகுளம் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வடக்கன்குளம், மார்ச்:
ஆவரைகுளம் அருகே உள்ள சிவஞானபுரத்தை சேர்ந்த சந்திரன் என்பவருடைய மனைவி விஜயா (வயது 29). கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த விஜயா சிவஞானபுரத்தில் உள்ள தங்கள் தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் பழவூர் போலீசார் சென்று விஜயா உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Related Tags :
Next Story