விபத்தில் வாலிபர் சாவு


விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 7 March 2021 8:24 PM GMT (Updated: 7 March 2021 8:24 PM GMT)

விபத்தில் வாலிபர் சாவு

திங்கள்சந்தை:
இரணியல் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் விஜய ரெக்சின் (வயது 22). இவர் மீன் வியாபாரம் செய்து வந்தார். 
நேற்று மதியம் இவர் திங்கள்சந்தையில் இருந்து பொருட்கள் வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி நின்று ெகாண்டிருந்த கார் மீது மோதியதோடு, எதிரே வந்த மற்றொரு கார் மீதும் மோதியது. இந்த விபத்தில் விஜய ரெக்சின் படுகாயமடைந்தார். 
உடனே அவர் சிகிச்சைக்காக நெய்யூர் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story