மணியனூரில் தீயில் கருகிய கட்டிட மேஸ்திரி பலி

மணியனூரில் தீயில் கருகிய கட்டிட மேஸ்திரி பலியானார்.
கந்தம்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூர் போயர் தெருவை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் ஜோதி மணி (வயது 29). கட்டிட மேஸ்திரி. இவர் சம்பவத்தன்று இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே புகை பிடிக்க தீக்குச்சியை பற்ற வைத்தபோது, தீக்குச்சி தவறி அவர் மீது விழுந்தது. இதில் அவரது ஆடை தீப்பிடித்து எரிந்தது. இதனால் உடல் கருகிய அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜோதிமணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






