ஆத்தூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது


ஆத்தூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 March 2021 4:08 AM GMT (Updated: 9 March 2021 4:08 AM GMT)

சிறுமியை கடத்திய வாலிபர் கைது

ஆத்தூர்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா சுத்தகரை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் கவுதம் (வயது 20). இவர் ஆத்தூர் அருகே உள்ள மணி விழுந்தான் காலனியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 3-ந் தேதி கடத்திச்சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாய் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கவுதமை கைது செய்தனர்.

Next Story