மேச்சேரியில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு


மேச்சேரியில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 9 March 2021 4:42 AM GMT (Updated: 9 March 2021 4:42 AM GMT)

2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

மேச்சேரி:
மேச்சேரி எம்.காளிப்பட்டி சாமியப்பா நகரை சேர்ந்தவர் மணிமாறன். இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 55). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து, அவர் கழுத்தில் இருந்த 4½ பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டார்.
எம்.காளிப்பட்டி சோழன் நகரை சேர்ந்தவர் தீனதயாளன். லாரி டிரைவர். இவரது மனைவி கலையரசி (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு சாத்தப்பாடியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.  காலையில் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது 3 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த 2 சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story