பங்குனி உத்திர திருவிழா


பங்குனி உத்திர திருவிழா
x

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 22-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

விழாவில், பங்குனி மாதத்தில் முருகனை குளிர்விக்கும் பொருட்டு பல லட்சம் பக்தர்கள் கொடுமுடிக்கு சென்று தீர்த்த காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும். 

இந்த திருவிழா வருகிற 22-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
விழாவில் தினமும் தந்தப்பல்லக்கில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை உலாவும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

 27-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணமும், பின்னர் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திரு உலா நடைபெறுகிறது. 

முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 28-ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. 31-ந்தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


Next Story