தொழிலாளி அடித்துக்கொலை


தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 12 March 2021 7:19 PM GMT (Updated: 12 March 2021 7:19 PM GMT)

சிவகங்கை அருகே குடும்ப தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை அருகே குடும்ப தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.
அடித்துக்கொலை
சிவகங்கையை அடுத்த நாலுகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி(வயது 51). கட்டிட சென்டரிங் தொழிலாளி. இவருைடய மனைவி ராக்கு (46).இவர்களுக்கு மணிகண்டன் (28) என்ற மகனும் பொன்னி (26) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் சென்டரிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் முனியாண்டிக்கும் அவரது மனைவி ராக்குவுக்கும் நேற்று காலை குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனியாண்டி தனது மனைவியை தாக்கி உள்ளார்.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த மணிகண்டன் அருகில் கிடந்த இரும்பு அடுப்பை தூக்கி கொண்டு முனியாண்டியை சரமாரி தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முனியாண்டி பரிதாபமாக இறந்தார்.
தாய்-மகன் கைது
இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி விசாரணை நடத்தி மணிகண்டன் மற்றும் அவரது தாயார் ராக்கு ஆகிய 2 பேரையும் கைது செய்தார். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story