முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2021 9:11 PM GMT (Updated: 17 March 2021 9:11 PM GMT)

மூலைக்கரைப்பட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சங்கரன்பிள்ளை (வயது 78), இவருக்கு மனைவியும், திருமணமான ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

வயது முதுமை காரணமாக, அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், வாழ்க்கையில் வெறுப்படைந்த சங்கரன்பிள்ளை நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரன்பிள்ளை நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story