ஓமலூர் அருகே பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை


ஓமலூர் அருகே பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2021 11:22 PM GMT (Updated: 17 March 2021 11:22 PM GMT)

ஓமலூர் அருகே பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஓமலூர்:
ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை ராமகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 16). இவர் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 10-ந் தேதி நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திகேயன் சுற்றிவருவதை பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story