1,200 கிலோ ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


1,200 கிலோ ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x
தினத்தந்தி 20 March 2021 9:58 PM GMT (Updated: 20 March 2021 9:58 PM GMT)

விருதுநகர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசியை ேவனுடன் பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசியை ேவனுடன் பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். 
ரேஷன் அரிசி 
விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
 அப்போது ஒரு சரக்கு வேனில் ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. போலீசாரை கண்டதும் வேனில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார்.
கைது 
 போலீசார் வேன் டிரைவர் விருதுநகர் முத்தால் நகரைச்சேர்ந்த வீராச்சாமி (வயது30) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, வேனிலிருந்து தப்பி ஓடியவர் விருதுநகர் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் செல்வம் என்பது தெரியவந்தது.  போலீசார் வேனில் இருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை வேனுடன் பறிமுதல் செய்து செல்வம் மற்றும் வீராச்சாமி மீது வழக்குப்பதிவு செய்தனர்,
இதையடுத்து வீராச்சாமியை கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர். செல்வத்தை தேடி வருகின்றனர்.

Next Story